Muttiah Muralitharan Controversial Interview: ஐபிஎல் ஒரு வியாபாரம்! இங்கே நியாயம் கிடையாது! கிரிக்கெட் உலகை அதிரவைத்த முத்தையா முரளிதரன் ஓபன் டாக்! ஐபிஎல் தொடர் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய வணிகம் என்று இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
தற்போதைய கிரிக்கெட் சூழலில் பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளதாகவும், இங்கே நியாயமான போட்டியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் போன்ற மைதானங்களில் ரன் மழை பொழிந்து வரும் நிலையில், பந்துவீச்சாளர்கள் வெறும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு கேளிக்கை மட்டுமே முக்கியமாகிவிட்டதால், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் முற்றிலுமாக மறைந்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பும்ராவையே அலட்சியமாக அடிக்கும் வீரர்கள்! மாறிப்போன நவீன கிரிக்கெட்!
முரளிதரன் பேசுகையில், “நாங்கள் விளையாடிய காலத்தில் பவர் பிளே ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தாலே அது நல்ல தொடக்கம். ஆனால் இப்போது 80 ரன்களுக்கு மேல் அசால்ட்டாக எடுக்கிறார்கள். ஜஸ்பிரித் பும்ரா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையே இளம் வீரர்கள் அலட்சியமாக சிக்ஸருக்குப் பறக்கவிடுகிறார்கள்” என்று ஆச்சரியம் தெரிவித்தார்.
அபிஷேக் சர்மா மற்றும் புதிய வீரர் சலில் அரோரா போன்றோர் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம் நம்ப முடியாததாக இருக்கிறது. பந்துவீச்சாளர்கள் எவ்வளவு துல்லியமாக வீசினாலும் அடி வாங்கும் நாளாகவே இன்றைய கிரிக்கெட் மாறிவிட்டது. ஸ்பின்னர்கள் கூட இப்போது பந்தை திருப்புவதை விட, வேகமாக வீசுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Muttiah Muralitharan Controversial Interview: வணிகம் முக்கியமா? விளையாட்டு முக்கியமா?
“ஐபிஎல் இப்போது ஒரு பெரிய வர்த்தகமாக மாறிவிட்டது. ஸ்பான்சர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு ரன் குவிப்பு தான் தேவைப்படுகிறது. பவுண்டரிகளும் சிக்ஸர்களும் இருந்தால் மட்டுமே ரசிகர்கள் மைதானத்திற்கு வருகிறார்கள். ஒருவேளை நியாயமான ஆடுகளங்களை அமைத்தால், சுவாரஸ்யம் இல்லை என்று கூறி ஸ்பான்சர்கள் வெளியேறிவிடுவார்கள்” என்று முரளிதரன் உண்மையை உடைத்துள்ளார்.
இந்த நிலை மாறப்போவதில்லை என்றும், பேட்டர்களுக்கு சாதகமாகவே கிரிக்கெட் விதிகள் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இருப்பினும், காலப்போக்கில் பந்துவீச்சாளர்கள் தங்களை இதற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு புதிய உத்திகளுடன் வருவார்கள் என்றும், இந்த கிரிக்கெட் யுத்தம் இப்படியேதான் தொடரும் என்றும் அவர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
அடுத்தவனப் பேச உனக்கு என்ன தகுதி இருக்கு? – ஹேமங் பதானியை வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த்

